Posts

Showing posts with the label சமாஜ்வாதி கட்சி

ராம்பூரும்..... காஜியாபாத்தும்.........

உத்தரப்பிரதேச மாநிலம் முஸ்லிம் வாக்காளர்கள் நிறைந்த மாநிலமாகும். முஸ்லிம்களின் வாக்குகளை அறுவடை செய்தே முலாயமின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து வந்தன. இந்த இரண்டு அணிகளை நம்பிய முஸ்லிம்களும் தங்களது அரசியல் அதிகாரம் குறித்த எவ்வித அக்கறையும் இல்லாது ஓட்டு போடுவதை மட்டுமே முக்கியக் கடமையாக நினைத்துக் கொண்டே வாழ்ந்தனர். தங்களது மண் ணும், தங்களது அரசியல் பிரதிநிதித்துவ மும் வீணடிக்கப்படுவதைக் கண்டு சிறிதும் சிந்தனையின்றி வாழ்ந்து வந்ததன் விளைவாக முஸ்லிம் வாக்காளர்கள் நிறைந்த தொகுதிகளில் முஸ்லிம் அல்லா தவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பரிதாப நிலை ஏற்படுகிறது. அதற்கு உத்தரப்பிரதேசத்தில் மட்டு மல்ல, இந்தியா முழுவதும் உதாரணங்கள் உண்டு. எனினும் உ.பி.யில் நாம் கண் முன்னால் கவனிக்கும் எடுத்துக்காட்டு களாக ராம்பூரும் காஜியாபாத்தும் அமைந்துள்ளன. முதலில் காஜியாபாத்தைப் பார்ப்போம். நான்கரை லட்சம் முஸ்லிம் வாக்காளர் களைக் கொண்ட இந்த தொகுதியில் இருந்து பாஜகவின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். முஸ்லிம்களின் வாக்கு வலிமை க...