Posts

பாஜக அணிக்கு தாவிய தெலுங்கானா கட்சி உடைகிறது!

ஆந்திராவில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு (டி.ஆர்.எஸ்.) குறைந்த இடங்களே கிடைத்துள்ளதால் கட்சியின் அதிருப்தியாளர்களால் அக்கட்சி உடையும் நிலையில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கம் வேண்டும் என தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கோரி வருகிறார். கடந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த இக்கட்சி, தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாத தால் அங்கிருந்து விலகியது. தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது கூட்டணியின் சார்பில் இந்த தேர்தலில் போட்டியிட்டது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி. ஆனால் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து கொண்டார் சந்திரசேகர ராவ். தங்களது கட்சித் தலைவரின் எதேச் சதிகாரப் போக்கால் அவரது கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே சந்திரச...

Election-2009 வாக்குரிமை மறுக்கப்பட்ட தலித் மக்கள்!

Image
இரும்பு மங்கை என்றும் தலித் மக்களின் பெருந் தலைவி என்றும் மாயாவதி அகில இந்திய அளவிலும் புகழப்பட்டாலும் தலித் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் இன்னும் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. விடுதலை பெற்ற 60 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தின் உரிமை மறுக்கப்படும் நிலை தொடர்ந்து வருகிறது. தலித் மக்களின் உரிமைகள் பறிக்கும் விவகாரங்கள் குறித்து தலித் உரிமை காக்கும் அமைப்பு 500 முறையீடுகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது. 1)2009 மக்களவைத் தேர்தலில் ஏழை தலித் வாக்களிக்கச் சென்ற போது தடுத்து நிறுத்தியதாக உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த புள்ளிகள். 2) அரசியல்வாதிகள் 3) அரசியல் (கு) தொண்டர்கள் 4) தேர்தல் பணியாளர்கள் 5) காவல்துறை அதிகாரிகள் தலித் மக்களின் உரிமைகளை ஆதிக்க சாதிவெறியினர் ...

பாளையங்கோட்டையில் வரதட்சணை ஒழிப்பு கருத்தரங்கம்

Image
பாளையில் த.மு.மு.க. சார்பில் நடந்த வரதட்சணை ஒழிப்பு கருத்தரங்கில் பொதுச் செயலாளர் சகோ. செ.ஹைதர் அலி உரையாற்றினார். இதில் துணை பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, மாநிலத் துணைச் செயலாளர் மைதின் சேட்கான், பேரா.ஹாஜாகனி மற்றும் த.மு.மு.க, ம.ம.க. மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

குர்ஆனை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்த ரஜியா சுல்தானா

உலகப் பொதுமறை திருக்குர்ஆன் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வருகிறது. பழமையான பாரசீகம், கிரேக்கம், ரோமன், லத்தீன் போன்ற மொழிகளிலிருந்து கடந்த ஆண்டு நேபாள மொழியிலும் அருள்மறை குர்ஆன் மொழிபெயர்க்கப் பட்டது. உலகில் வாழும் மனிதர்கள் பேசும் அனைத்து மொழிகளிலும் சத்தியத் திருமறையாம் திருக்குர்ஆன் மொழியாக்கம் செய்யப்பட்டு மக்களின் இதயங்களை சுத்திகரிக்கிறது. தற்போது இந்தியாவின் மிகப்பழமையான மொழிகளில் முக்கியம் இடம் வகிக்கும் வடமொழி என்று வர்ணிக்கப் படும் சமஸ்கிருத மொழியிலும் திருக் குர்ஆன் மொழிபெயர்க்கப்பட இருக் கிறது. ஹிந்து மதத்தின் வேத மொழி யாகக் கருதப்படும் சமஸ்கிருதத்தில் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு செய்யப் படுவது சமயங்களுக்கிடையே நன்னம் பிக்கை வளர்க்கும் முயற்சியாகும் என சமூகநல ஆர்வலர்கள் திருப்தி தெரிவிக்கிறார்கள். இந்த அரிய செயலை நிகழ்த்தி புகழ்பெறவிருப்பவர் ரஜியா சுல்தானா என்ற 21 வயது இளம்பெண் ஆவார். இவர் பேராசிரியர் முஹம்மது சுலை மானின் பேத்தியாவார். பேராசிரியர் முஹம்மது சுலைமான், திருக்குர்ஆனை ஹிந்தி மொழிக்கு மொழியாக்கம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜியா ச...

அசத்தும் அசதுத்தீன் உவைசி!

Image
ஹைதராபாத் மக்களவைத் தொகுதியை மீண்டும் ஒரு முறை கைப்பற்றியுள்ளது மஜ்லீலிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி. இக்கட்சியின் தலை வரான அசதுத்தீன் உவைசி வெற்றி பெற்றார். ஹைதராபாத்மக்களவைத் தொகுதியை மஜ்லீலிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி கைப்பற்றியிருப்பது எட்டாவது முறை என்பது குறிப்பிடத் தக்கது. அசதுத்தீன் உவைசி இரண்டாவது தடவையாக வெற்றி பெற்றிருக்கிறார். ஆறுதடவை அசதுத்தீனின் தந்தை சலாஹுதீன் உவைசி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2009 மக்களவைத் தேர்தலில் உவைசி தன்னை எதிர்த்துக் போட்டியிட்ட தெலுங்கு தேச வேட்பாளர் ஜாகித் அலிகானை தோற்கடித்தார். இவர் சியாசத் என்ற உர்து செய்தி ஏட்டின் ஆசிரியராவார். தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் போட்டியிட்டார். இவரை அசதுத்தீன் உவைசி ஒருலட்சத்து 13 ஆயிரத்து 865 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு ஹைதராபாத் நாடாளுமன்ற தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. 50லிருந்து 70 சதவீதம் வரை முஸ்லிம் வாக்காளர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ள...

தேவை அதிரடி ஆய்வு!

2009 நாடாளுமன்ற தேர்தல் மதவாத சக்திகளையும் பிராந்திய கட்சிகளையும் வீழ்த்தி முடக்கி மூலையில் வைத்து விட்டது. இது தேசிய அளவிலான தீர்ப்பு. மக்கள் மதவாதத்திற்கு எதிராகு மிக தீர்க்கமாகவே தீர்ப்பளித்துள்ளனர் என்பதை தெளிவுபடுத்துகிறது. எதிர்காலப் பிரதமர்களாக தங்களை வர்ணித்துக் கொண்டவர்களின் நிலை தங்களது தற்போதைய அந்தஸ்தை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்னும் நிலையில் கொண்டு போய் அவர்களை விட்டிருக்கிறது. 1991க்குப் பிறகு முதன்முறையாக ஒரு தேசிய கட்சி 200க்கு மேற்பட்ட இடங்களைக் கைப்ற்றியது. 2004ல் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் 21 இடங்களைக் கைப்பற்றி குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியது. இவையெல்லாம் காங்கிரஸ் மீது மக்கள் வைத்த நம்பிக்கையின் விளைவாக இந்த வெற்றி கிடைத்தது என காங்கிரஸ்காரர்கள் கூறினாலும் பாஜகவை புறக்கணிக்க நினைக்கும் இந்திய மக்களின் தற்காலிக மாற்று ஏற்பாடாகவே இது அமைந்திருக்கிறது என்பதை தற்போது வெற்றி பெற்றிருப்பவர்கள் உணர்ந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது.இந்த நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் பிரநிதித்துவம் கடந்...

ஒரிசாவில் பா.ஜ.க. வேட்பாளர் 9 பேர் டெபாசிட் இழந்தனர்

ஒரிசா மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரத்தை சங்பரிவார் சக்திகள் அரசியல் ஆதாயத்திற்காக முன்னெடுத்தன. இதனைத் தொடர்ந்து நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளத்திற்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்பட்டது. சில கட்சிகள் மாநிலத்தில் ஆட்சியைக் கலைத்து விட்டு கவர்னர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தின. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் ஆளுங்கட்சியிடம் கூடுதல் இடங்களை பாஜக கேட்டது. பிஜு ஜனதா தளம் கூடுதல் இடங்களைத் தர மறுக்கவே பாஜக, பிஜு ஜனதா தளத்துடன் 11 ஆண்டுகள் கொண்டிருந்த அரசியல் உறவை முறித்துக் கொண்டது. அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டது. ஆயினும் நவீன் பட்நாயக், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியை காப்பாற்றிக் கொண்டார். இதனிடையே மாநிலத்தில் உள்ள 21 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிட்டது. பாஜகவுக்காக, பாஜகவில் அடுத்த பிரதமர் வேட்பாளர் என கூறப்பட்ட நரேந்திர மோடி, அத்வானி, ராஜ்நாத்சிங் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்...