Posts

Showing posts from May 12, 2009

மயிலாடுதுறையில் பேராசிரியர் இறுதிநாள் பிரச்சார காட்சிகள்

Image
மயிலாடுதுறையில் பேராசிரியர் இறுதிநாள் (11.5.2009 பிரச்சார காட்சிகள்

பொள்ளாச்சியில் உமர் தீவிர வாக்கு சேகரிப்பு

Image
மனிதநேய மக்கள் கட்சியின் பொள்ளாச்சி வேட்பாளரும் தமுமுகவின் மாநிலச் செயலாளருமான இ.உமர் இறுதிகட்ட வாக்குச் சேகரிப்பு

மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் சூறாவளி பிரச்சாரம்

Image
மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளரும் தமுமுகவின் பொதுச் செயலாருமான செ.ஹைதர் அலி வாட்டி எடுக்கும் கத்தரி வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரம் செய்தார்

எந்தவித எதிர்பார்ப்புமின்றி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை : ம .நே. ம. க., வேட்பாளர் சலிமுல்லாகான் பேட்டி

Image
எந்த எதிர்பார்ப்புமின்றி மனிதநேய மக்கள் கட்சி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை செய்து வருவதாக அதன் ராமநாதபுரம்வேட்பாளர் சலிமுல்லாகான் தெரிவித்தார். "தினமலர்' நிருபருக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி: ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் எங்கள் கட்சியினரை அன்புடன் வரவேற்று, தங்களது ஓட்டு மனித நேய மக்கள் கட்சிக்கே என கூறியுள்ளனர். எங்கள் கட்சி தொண்டர்கள் தன்னலம் பாராமலும், பசியறியாமலும் ஆற்றிய பணிகளால் இன்று தொகுதி முழுவதும் மக்கள் மனித நேய மக்கள் கட்சி பற்றி பேசி வருவதை காணமுடிகிறது.எனது வெற்றி உறுதி என்பதால் மற்ற கட்சியினரிடம் எங்களை பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். என் மேல் தவறான குற்றச்சாட்டுகளை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு முகவரியில்லாமல் வினியோகிக்கின்றனர். குற்றச்சாட்டு கூறுபவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் பொது மேடையில் விவாதிக்க தயாரா? எனது பொது வாழ்க்கையில் நான் யாருக்கும் எப்போதும் கெடுதல் செய்யவில்லை . என் மீது கூறப்பட்ட குற்றசாட்டை நிருபித்தால், நான் வெற்றி பெற்றால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார். மனித நேய மக்கள் கட்சி கடந்த 14 ஆ