Posts

Showing posts from May 28, 2009

பாஜக அணிக்கு தாவிய தெலுங்கானா கட்சி உடைகிறது!

ஆந்திராவில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு (டி.ஆர்.எஸ்.) குறைந்த இடங்களே கிடைத்துள்ளதால் கட்சியின் அதிருப்தியாளர்களால் அக்கட்சி உடையும் நிலையில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கம் வேண்டும் என தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கோரி வருகிறார். கடந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த இக்கட்சி, தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாத தால் அங்கிருந்து விலகியது. தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது கூட்டணியின் சார்பில் இந்த தேர்தலில் போட்டியிட்டது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி. ஆனால் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து கொண்டார் சந்திரசேகர ராவ். தங்களது கட்சித் தலைவரின் எதேச் சதிகாரப் போக்கால் அவரது கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே சந்திரச

Election-2009 வாக்குரிமை மறுக்கப்பட்ட தலித் மக்கள்!

Image
இரும்பு மங்கை என்றும் தலித் மக்களின் பெருந் தலைவி என்றும் மாயாவதி அகில இந்திய அளவிலும் புகழப்பட்டாலும் தலித் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் இன்னும் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. விடுதலை பெற்ற 60 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தின் உரிமை மறுக்கப்படும் நிலை தொடர்ந்து வருகிறது. தலித் மக்களின் உரிமைகள் பறிக்கும் விவகாரங்கள் குறித்து தலித் உரிமை காக்கும் அமைப்பு 500 முறையீடுகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது. 1)2009 மக்களவைத் தேர்தலில் ஏழை தலித் வாக்களிக்கச் சென்ற போது தடுத்து நிறுத்தியதாக உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த புள்ளிகள். 2) அரசியல்வாதிகள் 3) அரசியல் (கு) தொண்டர்கள் 4) தேர்தல் பணியாளர்கள் 5) காவல்துறை அதிகாரிகள் தலித் மக்களின் உரிமைகளை ஆதிக்க சாதிவெறியினர்