பாஜக அணிக்கு தாவிய தெலுங்கானா கட்சி உடைகிறது!
ஆந்திராவில் தெலுங்கானா ராஷ்ட்ரீய         சமிதிக்கு (டி.ஆர்.எஸ்.) குறைந்த இடங்களே         கிடைத்துள்ளதால் கட்சியின் அதிருப்தியாளர்களால்         அக்கட்சி உடையும் நிலையில் உள்ளதாக தகவல்கள்         கூறுகின்றன.                        ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம்         உருவாக்கம் வேண்டும் என தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி         தலைவர் சந்திரசேகர ராவ் கோரி வருகிறார். கடந்த         தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த இக்கட்சி,         தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாத தால் அங்கிருந்து         விலகியது.                        தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து         மூன்றாவது கூட்டணியின் சார்பில் இந்த தேர்தலில்         போட்டியிட்டது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி. ஆனால்         தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே பாரதீய ஜனதா         கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து         கொண்டார் சந்திரசேகர ராவ்.                        தங்களது கட்சித் தலைவரின் எதேச் சதிகாரப் போக்கால்         அவரது கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே         சந்திரச...