Posts

Showing posts from May 19, 2009

இழப்புகள் இன்றி எதிர்காலம் இல்லை!

தேர்தல் தோல்விகளுக்குப் பின் னால் ஒரு சில அபிமானிகள் பழைய பல்லவியைப் பாடுகின்றனர். பேசாமல், வாய்மூடி திமுக தர முன்வந்த ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டு போயி ருக்கலாமே... என்று பேசுகிறார்கள். நமது சமுதாயத்தை அடிமைத்தன மாக எடை போடுகிறார்களே... என்ற சொரணையில்தான் 'தன்மான அரசி யல்' என்ற முடிவை எடுத்தோம். முஸ்லிம் லீக் பாணி அடிமை அரசியலை நாமும் செய்ய வேண்டி யிருந்தால் புதிய அரசியல் கட்சியே தேவையில்லை. இரண்டு மத்திய அமைச்சர் பதவி களை இழந்துவிட்டுத்தான் பாமக, புதிய கூட்டணியை அமைத்தது. இன்று இழப்புகளை சந்தித்திருக்கிறது. ஆனால், எதிர்காலத்தை இழக்க வில்லை. அதுபோல் மத்திய அரசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இடதுசாரிகள், புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள். இன்று சரிபாதி இடங்களை இழந்திருக்கிறார்கள். பாமகவும், இடதுசாரிகளும் பழையதை நினைத்து ஒடுங்கிவிடவில்லை. அதை இப்போதும் சரி என்று கூறி நம்பிக்கை யோடு அடுத்தக் கட்டத்திற்கு நகர் கிறார்கள். இதை முஸ்லிம் சமுதாயம் கவனிக்க வேண்டும். இன்று தனித்து நின்றோம். சமுதாயத்தில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறோம். புதிய நம்பிக்கையை ஊட்டியிருக்கிறோம். அந்த வகைய

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்! இதை நம்ப முடிகிறதா?

தமுமுக கோட்டையாகத் திகழும் மத்திய சென்னையில், துறைமுகத்தில் தமுமுக தொண்டர்களின் எண்ணிக் கையே பல ஆயிரம். அவர்களின் குடும்பத்தினர் ஓட்டுகள் பல பல ஆயிரம். இங்கு போஹ்ரா முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் ரயில் என்ஜினுக்கு ஓட்டு போட்டுள்ளார்கள். நாம் 25 ஆயி ரம் வாக்குகள் எதிர்பார்த்தோம். ஆனால் வாக்குப் பதிவு இயந்திரம் காட்டும் கணக்கு வெறும் 70 வாக்குகள் மட்டுமே. பொள்ளாச்சி தொகுதியில் குனிய முத்தூர் பகுதி நமது முக்கிய ஆதரவு பகுதியாகும். இப்பகுதி நமது வேட்பாளர் உமர் அவர்களின் சொந்த ஊராகும். ஊர் மக்கள் இவர் மீது, அமைப்புக்கு அப்பாற்பட்டு அன்பாக இருப்பவர்கள். அங்கு நமக்கு போடப்பட்ட வாக்குகளில் 20 சதவீதம் கூட வாக்கு இயந்திரம் காட்டவில்லை. ராமநாதபுரத்தில் தேவிப்பட்டினம், மண்டபம் பகுதிகளில் ஆயிரம், இரண்டா யிரம் என மக்கள் ரயில் என்ஜினுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வந்த எண்ணிக் கையோ அரசுத் தரப்பின் அயோக்கியத் தனத்தை அப்படியே தோலுரித்துக் காட்டும் விதத்தில் இருந்தது.

சரிகிறது மோடி செல்வாக்கு!

Image
மோடியை பாஜகவின் நட்சத்திர தலைவராக அக்கட்சியினர் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடினர். கட்சி யினர் பாராட்டியது போதாது என்று ஊட கங்கள் கூட மோடி புகழ் பாடின. மோடிக்கு இந்தியா முழுவதும் செல்வாக்கு இருப்பதாக கன்னாபின்னாவென கதை பின்னப்பட் டன. மோடி வருங்காலப் பிரதமர் என்றே அனைத்து ஊடகங் களும் குறிப்பிட்டன. அத்வானியை பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என அறிவித்த பின்னரும் கூட மோடியை முன்னிறுத்திய சங்பரி வார் கும்பல் வெறித்தனமான பிரச்சாரத் தில் ஈடுபட்டது. கொடூர இனப்படு கொலையாளன் மோடியை, தேர்ந்த பொருளாதார மேதை போல வர்ணித்து, சிலாகித்து மகிழ்ந்த சங்கும்பல் மோடிக்கு அகில இந்திய அளவில் செல்வாக்கு பெருகுகிறது என கதை விட்டனர். இறுதியில் எல்லாம் கடைந்தெடுத்த கயமைக் கதைகள் என்பதும், அவர்கள் விட்ட கலர் கலரான ரீலுக்கு யாரும் மயங்கவில்லை என்பதும் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெளிவானது. நாடெங்கும் படுதோல்வி அடைந்ததோடு மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் பலத்த சரிவை சந்தித்தது. 2004ல் பெற்ற ஓட்டு வீதத்தை விட நடைபெற்று முடிந்திருக்கும் தேர்தலில் குறைவாகவே பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமை ய

முற்றுபெற்று விட்டதா ஈழ விடுதலைப் போராட்டம்?

1980களில் தொடங்கிய தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் இறுதி முடிவை தழுவியிருக்கிறது. எல்.டி.டி.ஈ, ப்ளாட், டெலோ, ஈரோஸ், ஈ.என்.டி.எல்.எப்., இ.பி.ஆர்.எல்.எப். போன்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கங்கள் சிங்கள பேரின வாதத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தன. ஒவ்வொரு இயக்கமும் ஏதாவது ஒருவகையில் தனிச் சிறப்பு பெற்றிருந்தது. இதில் பலர் இந்தியாவிலும் பாலஸ் தீனத்திலும் ஆயுதப் பயிற்சியைப் பெற்றனர். இந்திய உளவுத்துறை 'டெலோ' அமைப் புக்கு பேராதரவை வழங்கி பயிற்சி கொடுத்தது. தமிழக உளவு அமைப்புகள் விடுதலைப் புலிகளை ஆதரித்து பயிற்சி அளித்தன. ஒரு கட்டத்தில் ஆறு அமைப்புகளின் தலைவர்களான பிரபாகரன், சபா ரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் ஒன்றாக நின்று கைகளை உயர்த்தி பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் தங்கள் ஒற்றுமையை வெளிக்காட்டினர். தமிழகமே பூரித்தது. எம்.ஜி.ஆர். புலிகளை ஆதரித்ததும், அந்தக் கோபத்தில் கருணாநிதி டெலோ அமைப்பின் தலைவரான சபா ரத்தி னத்தை ஆதரித்ததும் ஈழப் பிரச்சினை யில் குழு மோதல்களுக்கு வித்திட்டது. பிரபாகரன் மிகச்சிறந்த போர்க்கலை நிபுணராக அடையாளம் காணப்பட்டார். உமா மகேஸ்வரனும், சபா

வெற்றியை இழந்திருக்கிறோம் களத்தை இழக்கவில்லை!

Image
கண்மணிகளே... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) தேர்தல் பரபரப்புகள் ஓய்ந்து, புதிய ஆட்சியின் மந்திரிசபை குறித்து பரபரப்புகள் நிலவும் நேரத்தில் இக்கடிதம் வரைகிறேன். எல்லோரும் வெற்றி உலாவரும் நேரத்தில் உங்கள் முகத்தில் ஒருவித சோர்வு நிலவக்கூடும். வெற்றியையும் லி தோல்வியையும் கருத்தில் கொண்டுதான் நாம் தேர்தல் களத்துக்கு வந்தோம். 'தோல்வி தான் வெற்றிக்கான படிக்கல்' என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் தனித்து நின்று தேர்தலை சந்தித்ததே மிகப்பெரிய வெற்றியாகும். பணபலமும், அதிகார பலமுமின்றி இருபெரும் கூட்டணிகளை சமாளித்திருக் கிறோம். அதிகார முறைகேடுகளை எதிர்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஆளும் கட்சியின் சார்பில் பல கோடிகள் வாரி இறைக்கப்பட்டது. ஜெயலலிதா மீது உள்ள கோபத்தில் அரசு ஊழியர்களில் சிலரும் வாக்குப் பதிவின் போது, ஆளுங் கட்சியின் அராஜகங்களுக்கு துணை போயினர் அல்லது கண்டும் காணாமல் இருந்தனர். நமக்கு விழுந்த வாக்குகளை ஆளும் தரப்புக்கு மாற்றும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் திட்டமிட்டு தில்லுமுல்லுகள் செய்யப்பட்டதால், 67 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளை மட்டுமே நாம் பெற்றதுபோல்

ம.ம.க.வினர் மீது பொய் வழக்குகள்

மனிதநேய மக்கள் கட்சியினர் சென்னையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளியன்று (15.6.09) தமுமுக, மமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங் களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திமுக ரவுடிகளுக்கு எதிராகவும், காவல்துறையைக் கண் டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. எனினும் அனைத்து ஆர்ப்பாட் டங்களும் அமைதியான முறையில் நடந்து முடிந்தன. ஆனால் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் தூண்டுதல் பேரில் காவல்துறையினர் மற்றும் ம.ம.க.வினர் மீது தொடர்ச்சியாக பொய் வழக்குகளை புனைந்து வருகின்ற னர். ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத் தில் கலந்து ம.ம.க. வேட்பாளரும், மாவட்டச் செயலாளருமான சலிமுல்லா கான் உட்பட 100 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வந்தவாசியில் ததஜ அலுவலகத்தை தாக்கியதாக 30 பேர் மீதும், சேலத்தில் 20 பேர் மீதும் என ம.ம.க.வினர் மீது வழக்குகளைப் பதிவு செய்யும் அடக்குமுறையைக் கையாள ஆரம்பித்துவிட்டது ஆளுங் கட்சியான தி.மு.க. தமுமுகவின் ஆரம்ப காலங் களில் அடக்குமுறையைக் கட்டவிழ்த் தது இதே திமுகதான். ஆயினும் தமுமுக வீறு கொண்டு எழுந்தது. மக்களின் பே