Posts

Showing posts from May 6, 2009

அண்ணா சமாதியில் புதிய பராசக்தி

அபு ஹுசைன், துபை கேள்வி: பல தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கோடி கோடியாக பணம் பட்டுவாடா செய்யப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றவே...? பதில்: நாற்பது தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா செய்யப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன. தேர்தல் ஆணையம் இவ்விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். முகம்மது இப்ராகிம், பரங்கிப்பேட்டை கேள்வி: தேர்தல் கள அனுபவத்தில் ம.ம.க.வினரின் உழைப்பு எப்படி இருக்கிறது? பதில்: நமது தொண்டர்களின் அர்ப்பணிப்பு நமது கண்களை ஈரமாக்குகிறது. தங்கள் வருமானத்தையும், சொந்த வேலைகளையும் கூட பத்து நாட்களுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் ஆற்றும் களப்பணி மகத்தானது. கூலிக்கு வேலை செய்யும் பிற கட்சித் தொண்டர்களுக்கு மத்தியில் தியாகத்துடனும், சமுதாய ஆர்வத்துடனும் அவர்கள் கடும் வெயிலில் காட்டும் களப்பணிகள் பிறருக்கு முன்மாதிரியாக இருக்கிறது. இத்தகைய சகோதரர்கள் இருப்பதால் தான், நமது கட்சி யாரையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கிறது. எஸ். ரியாஸ், கரூர் கேள்வி: ம.ம.க.வை மட்டும் குறிவைத்து ஜெயினுலாபிதீன் எதிர்ப்பு பிரச்சாரம் நடத்துவதை அவரது தொண்டர்கள் ஏற்கவில்லை போல் தெரிகிறதே...?

மயிலாடுதுறையின் அவலங்களும் உங்கள் ஓட்டும்

சமுதாயத்தை தலைநிமிரச் செய்யுங்கள் தேர்தல் நிதி தாருங்கள்

Image
சமுதாயத்தின் தன்மானத்தைக் காக்க போர்ப் பரணி பாடி புறப்பட்டு நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது மனிதநேய மக்கள் கட்சி. பண பலம், குண்டர் பலம் என அனைத்தையும் இறக்கிவிட்டு தன் தொண்டர்களுக்கு ஆட்டுக்கிடா விருந்து முதல் டாஸ்மாக் சரக்கு வரை சகல வசதிகளையும் செய்து கொடுத்து அதிரடியாக வலம் வரும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர் களுக்கு மத்தியில், கிடைத்த நேரத்தில் கிடைத்த உணவை சாப்பிட்டு, டீயையும் வடையையும் மட்டுமே பலநேரம் உணவாக உண்டு கூலி வாங்காமல் கொளுத்தும் வெயிலில் உற்சாகமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் நமது தொண்டர்கள். நமது வேட்பாளர் களும் வீதி வீதியாக சளைக்காமல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஜமாஅத் சந்திப்பு, முக்கியப் பிரமுகர்கள் சந்திப்பு என தூங்குவதற்கு நேரமின்றி துடிப்பாக உழைத்து வருகிறார்கள். ஆனால் தோள்பலம், தொண்டர் பலம் இருந்தும் பொருளாதார பலம் இல்லாததால் நமது பிரச்சாரப் பணிகளில் சிறு தொய்வு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள அளவில் மூன்றில் ஒரு பகுதியைக் கூட நாம் இதுவரை செலவு செய்ய வில்லை என்பதுதான் உண்மை. விளம் பரங்கள், பிரச்சார செலவுகளுக்க

ம.ம.க.வை ஆதரிக்கும் அமைப்புகள்

மனிதநேய மக்கள் கட்சி நான்கு பாராளுமன்றத் தொகுதிகளில் போட்டி யிடுகிறது. பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும், ம.ம.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, தேசிய லீக் (நிஜாமுதீன்), கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம், தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் பேரவை, AIOBC, இஸ்லாமியர் விழிப்புணர்வு கழகம், தமிழ் மீனவ விடுதலை வேங்கைகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் சங்கம், தமிழக உரிமை இயக்கம், அருந்ததியர் நல அமைப்பு போன்ற அமைப்புகளும் மற்றும் பல்வேறு அரசு சாரா அமைப்பு கள், சங்கங்கள் ஆகியவை மனிதநேய மக்கள் கட்சியை ஆதரித்துள்ளன. இவற்றில் பல அமைப்புகள் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றன

மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடு

Image