Posts

Showing posts from May 8, 2009

ராஜபக்சே போர்க் குற்றவாளி! - தமுமுக தலைவர் குற்றச்சாட்டு

Image
இலங்கையில் Genocide எனப்படும் இனப்படுகொலை செய்யும் ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளியே. தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அணிசேரா அமைப்பில் உறுதியாக செயல்பட்டு வந்த இந்தியா, தென் ஆப்பிரிக்காவில் இனவெறி அரசுக்கு எதிராக பெரும்பான்மை கறுப்பினத்தவர்கள் ஆட்சி அமைக்க உதவியது. ஆனால் தற்போது அத்தகைய வலிமையை இந்தியா இழந்து நிற்கிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ''இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கவில்லை'' என்றார். அடுத்த வாரமே, தாம்பரம் பகுதியில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளிக்கும் புகைப்படங்கள் வெளியாயின. மகிந்த ராஜபக்சே மயிலாடுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் மணிசங்கர் அய்யரின் நெருங்கிய நண்பர். அவரது இல்லத் திருமணத்திற்கு ராஜபக்சே வந்து சென்றார் என்பது ஊரறிந்த உண்மை. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் பேசிவந்த ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் மாற்றிப் பேசுகிறார். தேர்தல் தேதி அறிவித்து, வேட்பாளர் பட்டியல் எல்லாம் வெளியான பிறகு தமிழக முதல்வர் கருணாநிதி 'பந்த்' அறிவிக்கிறார

மூலம் ம.ம.க ஓட்டு சேகரிப்பு இரு சக்கர வாகனப் பேரணி (video)

மயிலாடுதுறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க சகோதரர்கள் விபத்தில் சிக்கினர். 2 பேருக்கு காயம்!

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு ஆதரவாக ம.ம.க., த.மு.மு.க., தொண்டர்கள் உற்சாகத்தோடு களப்பணி ஆற்றி வருகின்றனர். இன்று நோட்டீஸ் வினியோகம் செய்வதற்காக துண்டு பிரசுரங்களோடு 4 மணி அளவில் ம.ம.க சகோதரர்கள் ஆட்டோவில் கும்பகோணத்திலிருந்து சோழபுரம் சென்று கொண்டிருந்தனர். மாணிக்க நாச்சியார் கோவில் என்ற இடமருகே சென்று கொண்டிருதபோது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதனால் ஆட்டோவில் இருந்த சகோதரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சோழபுரத்தை சேர்ந்த தஞ்சை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சகோ. யாசர் என்பவரின் கால் நரம்பு துண்டாகி பெரும் காயம் ஏற்பட்டது. சோழபுரம் கிளை த.மு.மு.க செயலாளர் பக்ருதீனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தமுமுகவினர் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றர். சகோ. யாசர் ஏற்கெனவே ஒரு கால் ஊனமானவர் அவருக்கு தற்போது மற்றொரு காலிலும் அடிபட்டதால் 5 மணிநேரம் ஆப்ரேசன் செய்ய வேண்டியுள்ளது என மருத்துவர்கள் கூறி விட்டனர். இன்று இரவு ஆப்ரேஷன் நடக்க உள்ளது. காயமடைந்த சகோதரர்களை ம.ம