Posts

Showing posts from May 20, 2009

Muslims in Parliament of India-2009

Image
இந்திய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள முஸ்லிம் எம்.பிகளின் தொகுப்புபடம் பெரியதாக தெரிவதற்கு படத்தின் மேல் கிளிக் செய்யவும்

திருவனந்தபுரம் அருகே மோதல்! -போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 4 முஸ்லிம்கள் பலி!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பீமாபள்ளி மற்றும் வலியதுறை பகுதியில் மீனவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் வலியதுறை பகுதியில் மீனவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் வலியதுறை பகுதியைச் சேர்ந்த சிலர் பீமாபள்ளி பகுதிக்குச் சென்று குடிபோதையில் ரகளை செய்துள்ளனர். இதனால் இருதரப்பினரி டையே மோதல் வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பீமாபள்ளியில் உள்ள வீடுகளுக்கு மீனவர்கள் தீ வைக்கப்பட்டது. இதில் 5 வீடுகள் தீயில் சாம்பலாயின. இதுபற்றி தகவல் அறிந்த தும் வலியதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் மீதும் அவர்கள் கல் வீசினர். இதில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு திருவனந்தபுரம் சஞ்சய் கவுல் விரைந்து சென்றார். கலவரத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் பீமாபள்ளி பகுதியைச் சேர்ந்த சிலர் வலியதுறை பகுதிக்குச் சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த 2 படகுகளுக்கு தீ வைத்தனர். இதனால் இருதரப்பினரும் மீண்டும் மோதிக் கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து போலீச

ராம்பூரும்..... காஜியாபாத்தும்.........

உத்தரப்பிரதேச மாநிலம் முஸ்லிம் வாக்காளர்கள் நிறைந்த மாநிலமாகும். முஸ்லிம்களின் வாக்குகளை அறுவடை செய்தே முலாயமின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து வந்தன. இந்த இரண்டு அணிகளை நம்பிய முஸ்லிம்களும் தங்களது அரசியல் அதிகாரம் குறித்த எவ்வித அக்கறையும் இல்லாது ஓட்டு போடுவதை மட்டுமே முக்கியக் கடமையாக நினைத்துக் கொண்டே வாழ்ந்தனர். தங்களது மண் ணும், தங்களது அரசியல் பிரதிநிதித்துவ மும் வீணடிக்கப்படுவதைக் கண்டு சிறிதும் சிந்தனையின்றி வாழ்ந்து வந்ததன் விளைவாக முஸ்லிம் வாக்காளர்கள் நிறைந்த தொகுதிகளில் முஸ்லிம் அல்லா தவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பரிதாப நிலை ஏற்படுகிறது. அதற்கு உத்தரப்பிரதேசத்தில் மட்டு மல்ல, இந்தியா முழுவதும் உதாரணங்கள் உண்டு. எனினும் உ.பி.யில் நாம் கண் முன்னால் கவனிக்கும் எடுத்துக்காட்டு களாக ராம்பூரும் காஜியாபாத்தும் அமைந்துள்ளன. முதலில் காஜியாபாத்தைப் பார்ப்போம். நான்கரை லட்சம் முஸ்லிம் வாக்காளர் களைக் கொண்ட இந்த தொகுதியில் இருந்து பாஜகவின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். முஸ்லிம்களின் வாக்கு வலிமை க

அஸாருதீன் வெற்றி சொல்லும் செய்தி!

Image
உத்தரப்பிரதேச மாநிலம் மொரா பாத்தில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஹம்மது அசாருதீன் வெற்றி பெற்றிருக்கிறார். பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரசில் இணைந்த அவர் ஹைதராபாத்திலிருந்து போட்டி யிடுவார் என அரசியல் பார்வையாளர் கள் எதிர்பார்த்தனர். ஆனால் காங்கிரஸ் தலைமை தனக்கு பலவீன மாக உள்ள உத்தரப்பிரதேசத்திற்கு அவரை அழைத்துச் சென்று மொராபாத்தில் போட்டியிட வைத்தது. வேட்பு மனுத் தாக்கல் செய்ததில் இருந்தே கள நிலவரம் அஸாருதீனுக்கு சாதக மாகவே இருந்தது. முஹம்மது அஸாருதீன் கிரிக்கெட் விளையாட்டில் மின்னும் நட்சத்திர மாக இருந்தபோது அவர் விளை யாட்டில் மேலும் பிரபலமாகி ஓய்வு பெற்றபின் அரசியலில் இறங்கி முக்கியத்துவம் பெற்றுவிட்டால் என்ன செய்வது என வயிறெரிந்த சில சக்திகள் அவர் கிரிக்கெட் சூதாட்டத் தில் ஈடுபட்டார் என பழிகள் சுமத்தி அவரை கிரிக்கெட் வாழ்க்கையை விட்டு முழுமையாக விடைபெற விடாமல் மனம் வெதும்பி வெளியேறச் செய்தனர். தான் குற்றமற்றவன் என பின்னர் நிரூபித்தார். வருடங்கள் பல உருண் டோடி விட்டன. அஸாருதீன் மிகவும் உயரத்திற்கு போவார் என எண்ணி அவர் மீது அவதூறுச் சேற்றை வாரி இறைத்தவர்கள

மயிலாடுதுறையில்: மணிசங்கர் அய்யர் தோற்றது ஏன்?

Image
மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யரைக் குறிவைத்து பிரச்சார யுத் தத்தை ம.ம.க. நடத்தியது. 15 ஆண்டு களாக எம்.பி.யாக இருந்த அய்யர் மயிலாடு துறையை துபாய் ஆக்குவேன் என்று சொல்லி அதனை பாலைவனமாக மாற்றியது, விவசாயிகள் நலனை புறக் கணித்தது போன்றவற்றை மையமாக வைத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. வெற்றி பெற்றால் மயிலாடுதுறைக்கு என்ன செய்வோம் என்று ம.ம.க. வேட்பாளர் வெளியிட்ட தொகுதி தேர்தல் அறிக்கை மக்களை வெகுவாகக் கவர்ந்தது. அய்யருக்கு எதிராக சரியான மாற்று பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்தான் என தொகுதி முழுக்க கருத்து பரவியது.  மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யர் தோற்ற தற்கு மனிதநேய மக்கள் கட்சியின் பிரச்சாரம்தான் காரணம் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுதர்சன நாச்சியப்பன் எம்.பி. தொலைக்காட்சி ஒன்றில் கூறியது குறிப்பிடத்தக்கது. இதைத்தான் மே 17 அன்று ஹிந்து நாளிதழும், மே 18 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழும் குறிப்பிட்டிருக்கிறது.

ராம்விலாஸ் பாஸ்வான்-சாதனை வெற்றியும் வேதனைத் தோல்வியும்!

Image
இந்தியாவின் தலித் பெரும் தலைவரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் இந்த மக்களவைத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான ஹாஜிபூரில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். 1989ல் இதே தொகுதியில் ராம்விலாஸ் பாஸ்வான் பெற்ற வெற்றி அசாதாரணமானது. ஏறக்குறைய ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஸ் வான், கின்னஸ் சாதனையாளர் களின் பட்டியலிலும் இடம் பெற்றார். 2009ல் நிகழ்ந்த தேர்தலில் அவரது 'செல்ல' ஹாஜிபூர் தொகுதியில் 37 ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத் தில் தோல்வியைத் தழுவியுள்ளார். வீட்டுக்கு வீடு பாஸ்வானின் புகைப்படம் தொங்கும் என்றும், ஹாஜிபூரின் மாணவர்கள், இளைஞர்கள் பாஸ்வான் படம் போட்ட பனியனை அணிந்து கொண்டு செல்வது வழக்கம் என்றும் பாஸ்வான் செல்வாக்கை சிலாகித்துப் பேசுவோர் உண்டு. அத்தனை செல்வாக்கு மிகுந்த பாஸ்வான் தற்போது தோல்வியைத் தழுவியிருக்கிறார். பாஸ்வானின் தோல்வி குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ''இது ஒரு விளையாட்டு போன்றது. அரசியலில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும்'' என்றார். தான் தோல்வி அடைந்தாலும் ஹாஜிபூர் மக்களுக் காக உழைப்பதை நிறுத்தப் ப

வெற்றியின் படிக்கட்டு-மக்கள் உரிமை தலையங்கம்

15வது மக்களவைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி பீடம் ஏறியிருக்கிறது. பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் கொள்கைகளில் சிறிய அளவு வித்தியாசம்தான் இருந்தாலும், பாஜகவுக்கு காங்கிரசு கட்சி பரவாயில்லை என்ற அளவில் சிலர் நிம்மதி அடையலாம். எனினும் லாலுபிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ், இடதுசாரிகள், தெலுங்குதேசம் என மூன்றாவது, நான்காவது அணிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளைக் கொண்ட ஒரு புதிய அணி ஆட்சியமைத்திருந்தால் அது ஒடுக்கப் பட்ட, நலிந்த மக்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். இது நடைபெறாவிட்டாலும், பாசிச சக்திகள் முடக்கப்பட்டது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய நிலையில் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி பீஹாரில் 12 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை சந்தித்திருக்கிறது. 1989ல் ராம்விலாஸ் பாஸ்வான் தனது சொந்தத் தொகுதியான ஹாஜிபூரில் நான்கரை லட்சத்துக் கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு அன

அரசு அதிகாரிகளா? திமுக பணியாளர்களா?

வாக்குச் சாவடியில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் பெரும்பாலும் ஆளும் கட்சிக்கே சாதகமாக நடந்து கொள்கின்றனர். குறிப்பாக திமுகவுக்கு சாதகமாகவே அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். அதனாலேயே திமுக ஆட்சிக்கு வரும்போதெல் லாம் அரசு ஊழியர்களின் சம்பளமும் மற்ற படிகளும் உயர்த்தப்படுகின்றன. அதற்கு விசுவாசமாகவே இவர்கள் தேர்தல் நேரத்தில் நடந்து கொள்கின்றனர். மதுரையில் ஓட்டு போடு வதற்காக சுந்தரராஜபுரம் வாக்குச் சாவடிக்கு மு.க.அழகிரி வந்தபோது அங்கு பணியில் இருந்த அரசு அதிகாரிகள் அனைவரும் எழுந்து நின்று கைக்கூப்பி வணக்கம் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர் வாக்களித்துவிட்டு வெளியே செல்லும்வரை யாரும் உட் காரவே இல்லையாம். இதைவிட வேறு என்ன சொல்ல முடியும் இவர்களின் நடுநிலை(!)த் தன்மைக்கு?  மேலும் திருமங்கலம் இடைத் தேர்தலில் இவர்கள் ஆற்றிய சேவையும் அனை வரும் அறிந்ததே! மாநிலத் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா போன்றவர்கள் நடுநிலையாக இருந்தாலும் இதுபோன்ற அலுவலர் களை வைத்துக் கொண்டு எப்படி தேர்தலை நியாயமாக நடத்த முடியும். அதிலும் இதற்கு முன் இருந்த கோபால் சாமி பி.ஜே.பி.க்கு நெருக்கமானவர் என்றும் கூறப்பட்டது. இப்போது வந்துள்ள