Posts

Showing posts from May 18, 2009

தமிழக தேர்தல் தில்லுமுல்லுகள் குறித்து முழுமையான விசாரணை தேவை

Image
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. இந்த முடிவை எதிர்பார்த்துதான் நாம் போட்டியிட்டோம். இருபெரும் கூட்டணிகளையும், அவர்களது பணபலத்தையும் எதிர்த்து வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பது நமக்கு தெரியும். ஆனால், ஒவ்வொரு தொகுதியிலும் 75 ஆயிரம் தொடங்கி 1 லட்சம் வரை வாக்குகளைப் பெறுவோம் என எதிர்பார்த்தோம். ஆனால் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக குறைவான வாக்குகளை நாம் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை நம்மால் நம்ப முடியவில்லை, ஏற்க முடியவில்லை. உதாரணத்திற்கு, மத்திய சென்னை தொகுதியில் துறைமுகம் பகுதியிலும், பொள்ளாச்சி தொகுதியில் குனியமுத்தூர் பகுதியிலும், ராமநாதபுரம் தொகுதியில் மண்டபத்திலும், மயிலாடுதுறை தொகுதியில் கும்பகோணத்திலும் ஒரு வாக்குச் சாவடியில் குறைந்தது ஆயிரம் வாக்காளர்கள் ம.ம.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் மிகமிகக் குறைவான வாக்குகளே கணக்கில் வருகிறது. 'வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளது' என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மையானதுதான் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. (இதுகுறித்து தினமணி

இனிவரும் தேர்தல்களில் ஓட்டுச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் தமுமுகவின் தலைவருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிடும் அறிக்கை: ஒடுக்கப்பட்ட மக்களும் அரசியல் உரிமை பெறவேண்டும், அடித்தட்டு மக்களுக்கும் அதிகாரப் பிரதிநிதித்துவம் வேண்டும், அரசியலில் லஞ்சத்தையும், ஊழலையும், மதவாதத்தையும் வேறுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த மகத்தான லட்சியங்களை முன்வைத்து மனிதநேய மக்கள் கட்சி மக்களவைத் தேர்தலில் களமிறங்கியது. மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்டது. இத்தொகுதிகளில் ம.ம.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்சி தொடங்கி மூன்று மாதங்களில் நான்கு தொகுதிகளில் மிகப்பெரிய சக்திகளை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி களம் கண்டது. தேர்தலில் வெற்றி கிட்டாவிட்டாலும் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்ந்த லட்சியங்கள் எதிர்காலத்தில் வெல்ல இடையறாது பாடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேர்தல் முடிவுகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறை மீது பலமான சந்தேகங்களை எழுப்பியுள்ள