மயிலாடுதுறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க சகோதரர்கள் விபத்தில் சிக்கினர். 2 பேருக்கு காயம்!


மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு ஆதரவாக ம.ம.க., த.மு.மு.க., தொண்டர்கள் உற்சாகத்தோடு களப்பணி ஆற்றி வருகின்றனர். இன்று நோட்டீஸ் வினியோகம் செய்வதற்காக துண்டு பிரசுரங்களோடு 4 மணி அளவில் ம.ம.க சகோதரர்கள் ஆட்டோவில் கும்பகோணத்திலிருந்து சோழபுரம் சென்று கொண்டிருந்தனர். மாணிக்க நாச்சியார் கோவில் என்ற இடமருகே சென்று கொண்டிருதபோது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதனால் ஆட்டோவில் இருந்த சகோதரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சோழபுரத்தை சேர்ந்த தஞ்சை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சகோ. யாசர் என்பவரின் கால் நரம்பு துண்டாகி பெரும் காயம் ஏற்பட்டது. சோழபுரம் கிளை த.மு.மு.க செயலாளர் பக்ருதீனுக்கு கையில் காயம் ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தமுமுகவினர் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றர்.

சகோ. யாசர் ஏற்கெனவே ஒரு கால் ஊனமானவர் அவருக்கு தற்போது மற்றொரு காலிலும் அடிபட்டதால் 5 மணிநேரம் ஆப்ரேசன் செய்ய வேண்டியுள்ளது என மருத்துவர்கள் கூறி விட்டனர். இன்று இரவு ஆப்ரேஷன் நடக்க உள்ளது. காயமடைந்த சகோதரர்களை ம.ம.க துணைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, அமைப்புச் செயலாளர் ஜைனுல் ஆபிதின் மற்றும் மற்றும் த.மு.மு.க லி ம.ம.க மாவட்ட நிர்வாகிகள் சென்று நலம் விசாரித்து தேவையான மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்து தந்து வருகின்றனர்.

காயமடைந்த நிலையிலும் தேர்தல் பணிகள் எங்களால் பாதிக்கப்பட்டு விட்டதே என்று அந்த சகோதரர்கள் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. சகோதரர்கள் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

சகோதர்களின் நலன் விசாரிக்க
9894131996(நசீர்) 9629339953 (சபீர்)

Comments

Popular posts from this blog

துறைமுகத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி

முற்றுபெற்று விட்டதா ஈழ விடுதலைப் போராட்டம்?

லண்டனில் த.மு.மு.க தலைவர்