Election-2009 வாக்குரிமை மறுக்கப்பட்ட தலித் மக்கள்!

        
       விடுதலை பெற்ற 60 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்நாட்டின்         உழைக்கும் வர்க்கத்தின் உரிமை மறுக்கப்படும் நிலை         தொடர்ந்து வருகிறது. 
        
       தலித் மக்களின் உரிமைகள் பறிக்கும் விவகாரங்கள்         குறித்து தலித் உரிமை காக்கும் அமைப்பு 500 முறையீடுகளை         தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது. 
        
       1)2009 மக்களவைத் தேர்தலில் ஏழை தலித் வாக்களிக்கச்         சென்ற போது தடுத்து நிறுத்தியதாக உள்ளாட்சி         அமைப்புகளைச் சேர்ந்த புள்ளிகள்.
        
       2) அரசியல்வாதிகள்
        
       3) அரசியல் (கு) தொண்டர்கள்
        
       4) தேர்தல் பணியாளர்கள்
        
       5) காவல்துறை அதிகாரிகள் 
        
       தலித் மக்களின் உரிமைகளை ஆதிக்க சாதிவெறியினர்         மறுத்ததில் முதலிடம் வகுத்ததை அந்த உரிமை அமைப்பு         குறிப்பிட்டுள்ளது.
        
       தலித் மக்களின் வாக்குரிமை மறுக்கும் விஷயத்தில்         முதலிடத்தில் ஆந்திராவும், இரண்டாவது இடத்தில் மாயவதி         ஆளும் உத்தரப் பிரதேசத்திலும், மூன்றாவது இடத்தில்         ராஜஸ்தானும், நான்காவது இடத்தில் பீகாரும், ஐந்தாவது         இடத்தில் மகராஷ்ட்ராவும் உரிமை பறிப்பு விஷயத்தில்         முன்னிலை வகிக்கின்றன.
        
       உரிமை மறுக்கப்படுவது தேசத்தின் உச்சகட்ட வன்முறை என         தேசிய தலித் கண்காணிப்பகம் வேதனை தெரிவித்துள்ளது.
        
       தலித் மக்களின் உரிமை மறுக்கப் பட்ட விவகாரத்தில் 28         சதவீத சம்பவங்கள் ஆதிக்க சாதியினரால் தலித் மக்கள்         ஓட்டுப் போடாவிடாமல் விரட்டப் பட்டனர். 
        
       தேர்தல் நாளன்று தலித் மக்கள் குடியிருக்கும்         பகுதிகளைக் குறி வைத்து ஆதிக்க சக்திகள் வன்முறையை         கட்டவிழ்த்து விட்டு குறிப்பிட்ட அந்தப் பகுதிகளில்         வாக்குப்பதிவை சீர்குலைக்கும் செயல்களும் அதிகரித்த         வண்ணம் உள்ளது.
        
       தலித் வாக்காளர்களின் உரிமைகளை மறுப்பதில் அரசியல்         கட்சிகள் அனைத்தும் ஒன்று பட்டு இருப்பதாக தேசிய         மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் பி.எஸ்         கிருஷ்ணன் தெரிவிக்கிறார். 2 சதவீதத்தினர் கிராம         பஞ்சாயத்துகளில் தலித் வாக்களர்களின் உரிமையை         மறுக்கின்றனர்.
        
       13 சதவீதம் தலித் வாக்குரிமை முறையீடுகள் அரசு         இயந்திரம் தலித்களுக்கு எதிராக உள்ளதாக வேதனை         தெரிவிக்கின்றன.
        
       11 சதவீத வழக்குகள் தேர்தல் அதிகாரிகள்தலித் வாக்         காளர்கள் வாக்களிப்பதற்கு தடையாக இருப்பதாக         குறிப்பிடுகின்றன. 10 சதவீத வழக்குகள் ஆதிக்க சாதியினர்         தலித்களுக்கு பதிலாக கள்ள ஓட்டு போடும் கொடுமைகளைக்         குறித்து நொந்து கொள்கிறது.
        
       மூன்று சதவீத தலித் மக்களின் வாக்குரிமை காவல்         துறையினர் நிகழ்ந்த்தும் அடக்குமுறைகளால் பறிக்கப்         படுகிறது.
        
       மீதம் உள்ள தலித் வாக்காளர்கள் பணம் மற்றும் மதுவிற்கு         விலை போகும் அவலம் நீடிப்பதாக தேசிய தலித் ஆணையம்         குறிப்பிடுகிறது.
        
       தலித்களின் துயரம் வாக்குப்பதிவு நாளோடு         முற்றுப்பெறுவதில்லை. அதன் பிறகு தான் கிளைமாக்ஸ்.
        
       தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே         அக்கிரமத்தின் உச்சகட்டம் நிகழ்த்தப்படுகிறது.
        
       இந்த அநீதியை எதிர்த்து தேசிய தலித் கண்காணிப்பகம்         பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில         முதல்வர்கள், மூன்று தலைமை தேர்தல் ஆணையர்களை சந்தித்து         முறையிட்ட போதும் பலன் ஒன்றும் விளையவில்லை என தங்களது         உள்ளக் கொதிப்பை வெளியிட்டுள்ளனர்.
        
       சட்டம் தலித்களின் விஷயத்தில் செயல்படவேயில்லை. தேர்தல்         ஆணையம் நேர்மையான தேர்தல் நடைபெற உறுதி ஏற்றுக் கொள்ள         வேண்டும்.
        
       தலித் மக்களின் வாக்கு மறுப்பு தொடர்பாக தொடுக்கப்பட்ட         அனைத்து முறையீடுகளின் மீதும் தீவிர விசாரணை நடத்தி         நடவடிக்கை எடுக்க முடிக்கப்பட வேண்டும் என்றும் தேசிய         தலித் தேர்தல் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
        
       செல்வி மாயாவதி தேர்தல் களத்தில் முன்னிறுத்தப்படலாம்.         ஆனால் இந்தியாவில் எண்ணற்ற கிராமங்களில் தலித் மக்களின்         வாக்குரிமை மறுக்கப்படுகின்றன. சேரிகளில் வெளிச்சக்         கீற்று தென்படுவது எப்போது.
Comments
Post a Comment