Posts

தமிழக தேர்தல் தில்லுமுல்லுகள் குறித்து முழுமையான விசாரணை தேவை

Image
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. இந்த முடிவை எதிர்பார்த்துதான் நாம் போட்டியிட்டோம். இருபெரும் கூட்டணிகளையும், அவர்களது பணபலத்தையும் எதிர்த்து வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பது நமக்கு தெரியும். ஆனால், ஒவ்வொரு தொகுதியிலும் 75 ஆயிரம் தொடங்கி 1 லட்சம் வரை வாக்குகளைப் பெறுவோம் என எதிர்பார்த்தோம். ஆனால் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக குறைவான வாக்குகளை நாம் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை நம்மால் நம்ப முடியவில்லை, ஏற்க முடியவில்லை. உதாரணத்திற்கு, மத்திய சென்னை தொகுதியில் துறைமுகம் பகுதியிலும், பொள்ளாச்சி தொகுதியில் குனியமுத்தூர் பகுதியிலும், ராமநாதபுரம் தொகுதியில் மண்டபத்திலும், மயிலாடுதுறை தொகுதியில் கும்பகோணத்திலும் ஒரு வாக்குச் சாவடியில் குறைந்தது ஆயிரம் வாக்காளர்கள் ம.ம.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் மிகமிகக் குறைவான வாக்குகளே கணக்கில் வருகிறது. 'வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளது' என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மையானதுதான் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. (இதுகுறித்து தினமணி...

இனிவரும் தேர்தல்களில் ஓட்டுச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் தமுமுகவின் தலைவருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிடும் அறிக்கை: ஒடுக்கப்பட்ட மக்களும் அரசியல் உரிமை பெறவேண்டும், அடித்தட்டு மக்களுக்கும் அதிகாரப் பிரதிநிதித்துவம் வேண்டும், அரசியலில் லஞ்சத்தையும், ஊழலையும், மதவாதத்தையும் வேறுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த மகத்தான லட்சியங்களை முன்வைத்து மனிதநேய மக்கள் கட்சி மக்களவைத் தேர்தலில் களமிறங்கியது. மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்டது. இத்தொகுதிகளில் ம.ம.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்சி தொடங்கி மூன்று மாதங்களில் நான்கு தொகுதிகளில் மிகப்பெரிய சக்திகளை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி களம் கண்டது. தேர்தலில் வெற்றி கிட்டாவிட்டாலும் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்ந்த லட்சியங்கள் எதிர்காலத்தில் வெல்ல இடையறாது பாடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேர்தல் முடிவுகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறை மீது பலமான சந்தேகங்களை எழுப்பியுள்ள...

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கை

செ.ஹைதர் அலி (மத்திய சென்னை) 13,160 பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (மயிலாடுதுறை) 19, 816 எஸ். சலிமுல்லாஹ் கான் (இராமநாதபுரம்) 21, 439 இ. உமர் (பொள்ளாச்சி) 13, 933

காயமடைந்த ம.ம.க தொண்டர்கள் சிகிச்கைக்காக அப்போலோவில் அனுமதி

இன்று (13-05-09) நடைபெற்ற வாக்குப்பதிவின் போது திமுக குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலில் காயமடைந்தோர்களை சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். சிகிச்சை பெறுபவர்களை தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ம.ம.க பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் உடல்நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர். சிகிச்சை பெறுபவர்களை ம.ம.க பொருளாளர் ஹாருன் ரசீத் உடன் இருந்து கவனித்து வருகிறார். சிகிச்சை பெற்று வருபவர்களை ஐ.என்.டி.ஜெ தலைவர் பாக்கர், அதிமுக திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் பதர் சையது, முஸ்லிம் தொண்டு இயக்கத்pன் பொதுச் செயலாளர் முகம்மது ஹனிபா ஆகியோர் உடல்நலம் விசாரித்தனர்.

மறுஓட்டுப் பதிவு நடத்த வேண்டும் ம.ம.க கோரிக்கை

Image
மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் இன்று காலை சுமார் 11.00 மணியளவில் திருவல்லிக்கேணியில் திமுக பகுதி செயலாளரும் மற்றும் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான காமராஜ், திமுகச் சேர்ந்த சேரன் ஆகியோர் தலைமையில் திமுக குண்டர்கள் 200க்கு மேற்பட்டோர் திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளி வாக்குச்சாவடி எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட்ட பத்து வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக தகவல் வந்ததையடுத்து ம.ம.க. வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் அங்கு சென்றுள்ளார். அப்போது திமுக குண்டர்கள் வீச்சரிவாள், கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மனிதநேய மக்கள் கட்சியின் பிரமுகர்கள் பயணம் செய்த கார்களை (Safari Car (Ash Colour) No.PY01 AA 1977 & Bolero Car (White Colour) No. TN 21 AX 9001) துவம்சம் செய்துவிட்டு, கார்களில் இருந்த திரு. ஜாகிர் உசேன், ஹசன், மீரான் மொய்தீன், காஜா, பாரூக், சலாவுதீன், ஹைதர் அலி, வசீம், ஜாகிர் உசேன் மற்றும் மூஸா உள்ளிட்ட நபர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் கொலை வெறித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது எமது கட்சி வ...

தமுமுக மற்றும் மமக தலைமை நிர்வாகிகள் ஓட்டளித்த காட்சிகள்

Image
வாக்குச் சாவடிகளை சோதனை செய்யும் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளரும் தமுமுகவின் பொதுச் செயலாளருமான செ. ஹைதர் அலி முத்தால்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் ஓட்டளித்தார். இராமநாதபுரம் ம.ம.க வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் இராமநாதபுரம் எம்.எஸ்.கே உயர்நிலைப் பள்ளியில் வாக்களித்த காட்சி

மயிலாடுதுறையில் பேராசிரியர் இறுதிநாள் பிரச்சார காட்சிகள்

Image
மயிலாடுதுறையில் பேராசிரியர் இறுதிநாள் (11.5.2009 பிரச்சார காட்சிகள்