துபையில் ரத்த தான முகாம்


துபை முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கடந்த 22.05.2009 அன்று மாபெரும் ரத்த தான முகாம் துபை அல்லிவாசல் மருத்துவமனையில் நடை பெற்றது. துபை முமுக நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். முஸ்லிமல்லாத சகோதரர்களும் இம் முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இம்முகாமில் முமுக துபை மண்டலத் தலைவர் அப்துல் ஹாதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். துபை மண்டல மருத்துவரணி செயலாளர் திருப்பந்துருத்தி அப்துல் ரவூப் மக்களை ஒருங்கிணைத்தார். மதுக்கூர் சேக் பரீத், கொள்ளுமேடு ஜாகிர் உசேன், மேலப் பாளையம் அப்துல் கரீம் ஆகிய சகோ தரர்கள் வாகன வசதிகளை சிறப்பான முறையில் செய்திருந்தார்கள்.

Comments

Popular posts from this blog

துறைமுகத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி

முற்றுபெற்று விட்டதா ஈழ விடுதலைப் போராட்டம்?

லண்டனில் த.மு.மு.க தலைவர்